Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரம் பைபாஸ் சாலையில் தவிக்கும் பயணிகள்

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (10:02 IST)
சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்புவதால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல். 
 
தமிழ் புத்தாண்டு புனித வெள்ளி மற்றும் சனி ஞாயிறு ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் வேலை நாள் என்பதால் நேற்று இரவே சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு இலட்சக்கணக்கான மக்கள் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். 
 
சென்னையை நோக்கி வரும் வாகனங்களால் தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து போலீசார் அதனை சரிசெய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் 4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் தாம்பரம் பைபாஸ் சாலையில் இறக்கிவிடப்படுவதாக புகார் கூறப்படுகிறது. முன்கூட்டியே கூறியிருந்தால் பெருங்களத்தூரில் இறங்கியிருப்போம் எனவும் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று மீண்டும் குறைவு.. ஒரு சவரன் ரூ.72,000க்கும் குறையுமா?

தனியார் மருத்துவாம்னையில் மருத்துவ மாணவியின் பிணம்.. கோவையில் பரபரப்பு..!

வனபத்ரகாளியை வேண்டி அதிமுக எழுச்சிப் பயணத்தை தொடங்கிய எடப்பாடியார்!

சென்னைக்கு மிக அருகில்.. ஏமாற்று விளம்பரம் செய்தால் நடவடிக்கை..TNRERA எச்சரிக்கை..!

ஏழை மாணவர்கள் தங்குவதற்காக இனி ‘சமூகநீதி விடுதிகள்’ - முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments