Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மற்றவர்கள் கட்சி பெயர் கொடியை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை: ஜவாஹிருல்லா

மற்றவர்கள் கட்சி பெயர் கொடியை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை: ஜவாஹிருல்லா
, திங்கள், 12 அக்டோபர் 2015 (04:28 IST)
மனித நேய மக்கள் கட்சி கொடி மற்றும் பெயரை பயன்படுத்துவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.
 

 
புதுக்கோட்டை மாவட்டம், அரசர்குளத்தில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வருகை தந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
மனிதநேய மக்களின் கட்சியின் உண்மையான பொதுக்குழு  உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்துள்ளோம். அதில் என்னை தலைவராக தேர்வு செய்துள்ளனர்.
 
நாங்கள் தான் உண்மையான மனிதநநேய மக்கள் கட்சி. எங்கள் பக்கம் தான் அனைத்து நிர்வாகிகளும் உள்ளனர். ஏற்கனவே, பொதுக்குழுவை கூட்டி இதை அறிவித்துவிட்டோம். ஆனால், மமகவின் முன்னாள் பொது செயலாளர் தமிமுன் அன்சாரி தஞ்சாவூர் பொதுக்குழு நடத்தியதாக கூறப்படுவது சட்ட விரோதமான செயல் ஆகும்.
 
மனிதநேய மக்கள் கட்சியின் கொடி மற்றும் பெயரையோ பயன்படுத்த எங்களுககு மட்டுமே முழு உரிமை உள்ளது. அதை மற்றவர்கள் பயன்படுத்தினால், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்போம்.
 
மனிதநேய மக்கள் கட்சியில் விரிசல் அதும் இல்லை. விரைவில் அதிக வேகத்துடன் கட்சி செயல்படும். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் கருத்து கூற முடியும் என்றார். 
 

Share this Story:

Follow Webdunia tamil