Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுவுக்கு அடிமையான மகனை கொன்ற பெற்றோர்

மதுவுக்கு அடிமையான மகனை கொன்ற பெற்றோர்
, புதன், 8 நவம்பர் 2023 (13:17 IST)
தென்காசியில் மகனை அவரது பெற்றோரே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மதுபோதைக்கு அடிமையான முகமது சித்திக் என்ற இளைஞர் தினமும் பெற்றோருடன் பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மதுவுக்கு அடிமையாக தினமும் இதேபோல் நடந்து வரும் மகன் சித்திக்கினால் அவரது பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மதுபோதைக்கு அடிமையான சித்திக்கை   கடந்த 5 ஆம் தேதிபெற்றோர் உள்ளிட்ட 3 பேர்  அவரது கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளனர்.

அதன்பின்னர், மகன் முகமது சித்திக் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் நாடகமாடியுள்ளனர். பின்னர், பிரேதபரிசோதனையின்போது, அவர் கழுத்தில் காயம் மூலம் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து சித்தின் பெற்றோர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை முதல் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை.. முழு விவரங்கள்..!