Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவி பார்த்த மாணவி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு

Webdunia
புதன், 5 ஜூன் 2019 (14:19 IST)
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில்  பெற்றோர் கண்டித்ததால், வருத்தமுற்ற கல்லூரி மாணவி ஒருவர் தூக்கில் தொங்கினார். ஆனால் எடை தாங்காமல் கயிறு அறுந்ததால் அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில்  உள்ள ஐஐடி வளாகத்தில்  18 வயது மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன்  வசித்துவருகிறார்.இவர்  ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று முந்தினம் தனது வீட்டில் அதிக நேரம் டிவி பார்த்ததாகத் தெரிகிறது.இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் வருத்தமுற்ற மாணவி தனது அறையைப் பூட்டிக்கொண்டார். 
 
அவரது சப்தம் கேட்காத பெற்றோர் உடனே பதறியடித்து கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது மாணவி கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அவரது எடை தாங்காமல் அக்கயிறு அறுந்து விழுந்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளதாகத் தெரிகிறது.
 
பின்னர் மாணவியைப் பெற்றோர்  தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments