Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் அனுமதி கூடாது: காவல்துறை அறிவுரை

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (16:16 IST)
மாணவ-மாணவிகள் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகள் தொடங்க அவரது பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என்று சேலம் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
 

 


 
சேலம் மாவட்டத்தில் வினுப்பிரியா தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளைஞர்கள் காதல் விவகாரத்தில் ஃபேஸ்புக்கில் பழி வாங்குவது வழக்கம் ஆகிவிட்டது. அதனால் சேலம் மாவட்ட காவல்துறை ஆணையர் சுமித்சரண் இன்று அறிக்கை இன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
 
வாட்ஸ்அப்  மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தும் பொது மக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் தங்களது குழந்தைகளுக்கு தனியாக வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை தொடங்கி பயன்படுத்த அனுமதிப்பதால் முன்பின் தெரியாத நபர்கள் இணையதளம் மூலமாக தொடர்பு கொண்டு நமது குழந்தைகளிடம் நயவஞ்சகமான முறையில் நல்லவர்கள் போல தகவல் பரிமாற்றம் செய்வார்கள்.
 
தகவல் பரிமாற்றம் மூலம் ஆபாச படங்களை காட்டி, அதுபோல ஜாலியாக இருக்கலாம் என்று ஆசையை காட்டி அழைத்து திருமணம் ஆசையை ஏற்படுத்தி, அவர்களுக்குன் தெரியாமல் அவர்களை ஆபாச படம் எடுத்து, அவற்றை காட்டி மிரட்டி, இணையதளத்திலும் வெளியிடுவார்கள்.
 
எனவே தங்கள் குழந்தைகள் வட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை துவங்காமல் பார்த்து கொள்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க நிதி இல்லையா? ஈபிஎஸ் கண்டனம்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக, பாஜக ஓட்டுக்கள் எங்கே? டெபாசிட் வாங்குமா நாதக?

டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாஜக ஆட்சி..! காங்கிரஸ் கட்சிக்கு முட்டை..!

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments