Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கு செல்லும் 1-8 வகுப்பு மாணவர்கள்?

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (09:48 IST)
சென்னையில் சில தனியார் பள்ளிகள் தற்போதே பள்ளிகளை திறப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் நவம்பர் 1 ம் தேதி முதலாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் சென்னையில் சில தனியார் பள்ளிகள் தற்போதே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை பள்ளிகளுக்கு வரவைப்பதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழ்நாடு பெற்றோர், மாணவர் நலச் சங்கம் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. 
 
1 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாஸ்க் கூட அணிய தெரியாது. எனவே தடுப்பூசி போட்டுக் கொண்ட பெற்றோர்கள் பள்ளியில் 1 ஆம் வகுப்பு மாணவர்களோடு இருக்கலாம். மாணவர்களுக்கு மாஸ்க் அணிய சிரமமாக இருந்தால்,  மூச்சுவிட சிரமப்பட்டால் அவர்களை எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் வகுப்புகளை நேரயாக நடத்துவதற்கு தமிழக அரசு முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் கடைசி நாளில் சரிந்தது தங்கம்.. இன்னும் சரிய அதிக வாய்ப்பு?

நாங்கள் உறுப்பினர்களாக சேரவே இல்லை.. ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் தோல்வியா?

தவெகவில் ஓபிஎஸ்? அவைத்தலைவர் பதவி வழங்குகிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அம்மாவை தப்பா பேசிய உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! - கூட்டணி முறிவை படம் போட்டு காட்டிய ஓபிஎஸ் அறிக்கை!

இந்தியா கச்சா எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் நிற்கும் நிலை வரலாம்..? - ட்ரம்ப் கிண்டல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments