Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவை தடுக்க முடியாது: பண்ருட்டி ராமச்சந்திரன்!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (15:00 IST)
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை தொடர்ந்தால் அக்கட்சியின் அழிவை யாராலும் தடுக்க முடியாது என அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற மூன்று தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சி தோல்வியை சந்தித்துள்ளது என்றும் எடப்பாடி பழனிச்சாமி வைத்து அதிமுகவை காப்பாற்ற முடியாது என்றும் அவரிடம் தாய்மை உள்ளம் இல்லை என்றும் தெரிவித்தார்
 
எடப்பாடி பழனிசாமி தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவைத் தடுக்க முடியாது என்றும் அதிமுகவை காப்பாற்ற யார் முன்வந்தாலும் என் ஆதரவு தருவேன் என்றும் தெரிவித்தார் 
 
டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணக்கமாக செயல்பட விரும்புகிறார் என்றும் சசிகலா சட்டரீதியில் அதிமுகவை மீட்கப் போராடுகிறார் என்றும் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் நோக்கம் ஒன்றாக உள்ளது என்பதால் அதற்கு அவர்கள் போராடுகிறார் என்று ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments