Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சசிகலாவும், நானும் அரசியல்வாதி’ - பூரிக்கும் தா.பாண்டியன்

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (17:22 IST)
சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினேன். நானும் அரசியல்வாதி, சசிகலாவும் அரசியல்வாதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.


 

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

ஆனால், ஜெயலலிதா பதவி வகித்த அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு, அடுத்து யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தொண்டர்கள், கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சசிகலா இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட அதிகப்பட்ச வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

இந்நிலையில், போயஸ் கார்டனில் சசிகலாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், ”ஜெயலலிதா மறைவுக்கு துக்கம் விசாரிக்க சென்றபோது கூட்டம் அலைமோதியதால் யாரையும் சந்தித்துப் பேச முடியவில்லை.

அதனால், தான் இன்று சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினேன்.  நானும் அரசியல்வாதி, சசிகலாவும் அரசியல்வாதி. அங்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களும் அரசியல்வாதி. எது எப்படி இருந்தாலும், மக்கள் சக்தி சசிகலாவுக்கு பின்னால் உள்ளது” என்று கூறியுள்ளார்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments