Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் -விஜயகாந்த்

Webdunia
வியாழன், 18 மே 2023 (20:32 IST)
’’தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்   கூடுதல் கவனம் செலுத்தி ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

’’ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும், கருவூலம் மூலம் ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், பணி வரன் முறை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 12,525 ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள்  சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பாக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கிராம பகுதிகளில் மக்கள் பணிகள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எப்போழுது கிராமங்கள் முன்னேறுகிறதோ அப்போது தான் நமது நாடும் முன்னேறியதாக சரித்திரம் இருக்கும். கிராமத்தின் பிரதிநிதியாக இருக்கும் ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கை மிக முக்கியமானது. தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்   கூடுதல் கவனம் செலுத்தி ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்;; என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments