Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் -விஜயகாந்த்

Webdunia
வியாழன், 18 மே 2023 (20:32 IST)
’’தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்   கூடுதல் கவனம் செலுத்தி ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

’’ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும், கருவூலம் மூலம் ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், பணி வரன் முறை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 12,525 ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள்  சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பாக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கிராம பகுதிகளில் மக்கள் பணிகள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எப்போழுது கிராமங்கள் முன்னேறுகிறதோ அப்போது தான் நமது நாடும் முன்னேறியதாக சரித்திரம் இருக்கும். கிராமத்தின் பிரதிநிதியாக இருக்கும் ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கை மிக முக்கியமானது. தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்   கூடுதல் கவனம் செலுத்தி ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்;; என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

பரந்தூர் பிரச்சினை முதல் டாஸ்மாக் ஊழல் வரை! - தவெக கொண்டு வந்த 17 தீர்மானங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments