Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென பழுதான பாம்பன் பாலம்: ரயில்கள் ரத்தானதால் பயணிகள் அதிருப்தி

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:00 IST)
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் இன்று மாலை திடீரென பழுதானது. இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய நெல்லை விரைவு ரயிலும், சேது விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து ராஜஸ்தான் செல்லும் அஜ்மீர் விரைவு ரயில் இரவு 10.15க்கு புறப்படுவதற்கு பதிலாக நாளை காலை 7.15க்கு புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அஜ்மீர் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இரவு முழுவதும் பயணிகள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பழுதான பாம்பன் ரயில் பாலத்தை பழுதுநீக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், இன்று இரவுக்குள் பழுது சரிசெய்யபப்டும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments