திடீரென பழுதான பாம்பன் பாலம்: ரயில்கள் ரத்தானதால் பயணிகள் அதிருப்தி

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:00 IST)
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் இன்று மாலை திடீரென பழுதானது. இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய நெல்லை விரைவு ரயிலும், சேது விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து ராஜஸ்தான் செல்லும் அஜ்மீர் விரைவு ரயில் இரவு 10.15க்கு புறப்படுவதற்கு பதிலாக நாளை காலை 7.15க்கு புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அஜ்மீர் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இரவு முழுவதும் பயணிகள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பழுதான பாம்பன் ரயில் பாலத்தை பழுதுநீக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், இன்று இரவுக்குள் பழுது சரிசெய்யபப்டும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவை! முதல் இடத்தை பிடித்த சென்னை மெட்ரோ!

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments