Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்லடம் படுகொலை: FIR-ல் பரபரப்பு தகவல்கள்

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (17:09 IST)
திருப்பூர்  மாவட்டம் பல்லடம் என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இந்தக் கொலைக்கு முன்விரோதம் காரணம் என முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பூர்  மாவட்டம் பல்லடம் என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, அந்த பகுதியில் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து இணையதளத்தில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இந்தக் கொலைக்கு முன்விரோதம் காரணம் என முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் பல்லடம் சாலையில் உணவகம் நடத்தி வந்திருக்கிறார். இந்த உணவகம் எதிரில்  வெங்கடேஷ் கோழிக்கடை நடத்தி வந்துள்ளார்.

இந்த  நிலையில்,  உணவகத்தில் இருந்து சிலிண்டர் மற்றும் கோழிக்கூண்டுகளை  வெங்கடேஷ் எடுத்துச் சென்றதால் முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments