Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 எம்.எல்.ஏக்களிடம் டீல் பேசும் எடப்பாடி? - தினகரன் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (11:26 IST)
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தங்கள் அணி பக்கம் இழுக்கும் முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரிடையாக இறங்கியுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

 
தினகரன் பக்கம் 18 எம்.எல்.ஏக்கள் சென்ற போதிலிருந்தே அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டிருந்தார். அதற்கான பொறுப்பு ஒரு முக்கிய அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்த பலனும் இல்லை.
 
தற்போது தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்பு எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கவில்லை. எனவே, 18 எம்.எல்.ஏக்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். 3வது நீதிபதி நியமிக்கப்பட்டு தீர்ப்பு வெளியாவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அப்படியே தீர்ப்பு வெளியானாலும், நீதிபதியின் தீர்ப்பு, தலைமை நீதிபதியின் தீர்ப்பை பின்பற்றித்தான் இருக்கும் என்கிற கருத்து நிலவுகிறது. 
 
தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்து விட்டால் இடைத்தேர்தலைத்தான் சந்திக்க வேண்டும். அப்போது தினகரன் அணி சார்பாகத்தான் போட்டியிட முடியும். அப்படி போட்டியிடும் போது மக்கள் வாக்களித்து வெற்றி பெறச்செய்வார்கள் என்பதை உறுதியாக கூற முடியாது. எனவே, தங்களின் எம்.எல்.ஏ பதவி நீடிக்குமா என்கிற கலக்கம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

 
எனவே, அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈட்டுபட்டுள்ள முதல்வர் பழனிச்சாமி அவர்கள் ஒவ்வொருவரிடமும் நேரிடையாக செல்போனில் பேச தொடங்கியுள்ளாராம். வணக்கம்.. நான் முதல்வர் பழனிச்சாமி பேசுகிறேன்’ என பேச துவங்கும் முதல்வர், நீங்கள் நம்ம ஆட்சிக்கு ஆதரவு கொடுங்கள். எங்கள் அணிக்கு வந்துவிடுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என உரிமையாக பேசுகிறாராம். 
 
முதல்வரே நேரிடையாக இப்படி களத்தில் இறங்கியிருப்பது தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.  

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments