Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டி பஜாரில் உலகத் தரமான சாலை..

Arun Prasath
புதன், 13 நவம்பர் 2019 (19:28 IST)
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாண்டி பஜாரில் உலகத் தரத்திற்கேற்ப சாலை அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

தி நகர் பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விசாலமான நடைபாதை, சாலைகள், வணிக வளாகங்கள் நவீன குப்பை தொட்டிகள் ஆகியவற்றிற்கு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வந்தன.

தற்போது இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று மாலை புதுப்பிக்கப்பட்ட சாலைகளை திறந்து வைத்து மணி அடித்து முதல்வர் பழனிசாமி துவங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர். ”ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உலகத் தரத்திற்கேற்ப சாலை அமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மக்கள் எளிதாக பாண்டி பஜார் பகுதியில் பயணம் செய்யமுடியும்” என கூறினார்.

மேலும், போதிய நிதி ஆதாரத்தை திரட்டி, அனைத்து சாலைகளும் படிபடியாக சீரமைக்கப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments