Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சட்ட மன்றத் தேர்தலில் பழ.நெடுமாறன் போட்டி?

சட்ட மன்றத் தேர்தலில் பழ.நெடுமாறன் போட்டி?

சட்ட மன்றத் தேர்தலில் பழ.நெடுமாறன் போட்டி?
, செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (05:00 IST)
சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பழ.நெடுமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தஞ்சையில், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
தஞ்சை முள்ளி வாய்க்கால் முற்றத்தில், தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும்.
 
தமிழகத்தில், திமுக மற்றும் அதிமுகவு்கு மாற்றாக ஒரு அணி அமைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என நான் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறேன். அது, தற்போது, மக்கள் நல கூட்டணி மூலம் நிறைவேறியுள்ளது.
 
தமிழக சட்டசபை தேர்தல் தமிழர் தேசிய முன்னணி போட்டியிடுவது குறித்து கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன் என்றார். 

அவரது பேச்சில் இருந்து தமிழர் தேசிய முன்னணி வைகோ தலைமையிலான மூன்றாவது அணியில் இடம் பெற அதிபட்ச வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil