Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பச்சமுத்து 'கைது' : தயாரிப்பாளர் மதன் மாயமானாரா மாயமாக்கப்பட்டாரா?

பச்சமுத்து 'கைது' : தயாரிப்பாளர் மதன் மாயமானாரா மாயமாக்கப்பட்டாரா?
, வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (12:20 IST)
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பெற்ற பணத்தை பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு திரைப்பட தயாரிப்பாளர் மதன், சில மாதங்களுக்கு முன்பு மாயமானார்.


 


மதனிடம் பணம் கொடுத்த, மாணவர்களும் பெற்றோர்களும் பச்சமுத்து வீடு முன்பு தங்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர். மதனை கண்டுபிடித்து தரக் கோரி அவரது தாயார் தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதனை 2 வாரத்துக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் நடந்த விசாரணையில், ”எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவை ஏன் விசாரிக்கக் கூடாது என்று நிதிபதி கேள்வி எழுப்பியதை அடுத்து அவரிடம் விடிய விடிய மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 14 மணிநேரத்தை தாண்டிய நிலையில், காவல்துறையினர் பச்சமுத்துவை கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதி கொலை பற்றி தகவல் வெளியிட்ட திலீபன் மகேந்திரன் கைது