Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவரை அடித்து உதைத்து வீடியோ - தொடரும் மாணவர்கள் மோதல்

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (16:02 IST)
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே நேற்று நடந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து மாணவர் ஒருவரை அடித்து உதைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களில் இரு தரப்பினரிடையே “யார் ரூட்டு தல?” என்பதில் தகராறு ஏற்பட்டது. அது பின்னர் மோதலாக வெடித்தது. இதில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை பேருந்துக்குள் புகுந்து சரமாரியாக வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவர் ஒருவரை சட்டையின்றி நிற்க வைத்து அடித்து உதைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அந்த மாணவரை தகாத வார்த்தைகளால் பேசுவதுடன் ”53 ரூட்டுக்கு ஜே” என்று 108 முறை எழுதும்படி வற்புறுத்துகின்றனர்.
இந்த வீடியோ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments