Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் காலில் விழுந்து கிடக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்: ப.சிதம்பரம் கடும் தாக்கு!

மோடியின் காலில் விழுந்து கிடக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்: ப.சிதம்பரம் கடும் தாக்கு!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (10:09 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக மற்றும் தமிழக அரசியல் நிலவரம் காரணமாக பிரதமர் மோடியை டெல்லி சென்று அடிக்கடி சந்திக்கின்றனர். இதனால் இவர்கள் இருவரையும் பின்னால் இருந்து இயக்குவது பிரதமர் மோடிதான் என அரசியல் வட்டாரத்தில் வெளிப்படையாக பேசுகிறார்கள்.


 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவின் ஒவ்வொரு விஷயமும் பாஜக எடுக்கும் முடிவில் தான் உள்ளது. பாஜக அதிமுக மூலம் தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது என பல அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அதிமுகவை இணைக்கும் படலம் டெல்லியில் பாஜக முன்னிலையில் நடந்து வருவதாக பேசப்படுகிறது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் ஒரே நேரத்தில் டெல்லி சென்றனர்.
 
இதனை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று பொன்னமராவதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விமர்சித்துள்ளார். அப்போது பேசிய அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இருவரும் மோடி காலிலேயே விழுந்து கிடக்கின்றனர் என கூறினார் ப.சிதம்பரம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments