Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்ம கேப்டனும் பாராட்டிடார்ல எடப்பாடி அரசை....

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (16:30 IST)
சில தினங்களாக தமிழகத்தை புரட்டி எடுத்த கஜா புயல் ஒருவழியாக கரையைக் கடந்தது. தகுந்த நேரத்தில் ஆபத்து உதவியாக செயல்பட்டு தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்த தமிழக அரசு மக்களுக்கு தேவையான பாதுகாப்பு முகாம்களை ஏற்படுத்தி கொடுத்தது உரிய நேரத்தில் சிறப்பாகச் செயப்பட்டதை  எதிர்கட்சி தலைவர் முதற்கொண்டு அனைத்து தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.


 
 
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழக அரசு கஜா புயலில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களைக் காப்பாற்ற முயன்றது பாராட்டுக்குறியதாகும்.
 
புயல் பாதிப்பு ஏற்படுத்திய நாட்களில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இரவு பகலாக உழைத்த அனைத்து அமைச்சர்களையும் தேமுதிக சார்பில் வரவேற்கின்றோம்.
 
மேலும் வேதாரண்யம் போன்ற இடங்களில் 36 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்திருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments