Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

Mahendran
செவ்வாய், 11 ஜூன் 2024 (18:58 IST)
வெளிமாநில  பதிவெண் கொண்டு தமிழ்நாட்டில் இயங்கும் ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாட்டு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதி சீட்டு பெறாமல், வெளி மாநிலங்களில் உள்ள ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் தமிழ்நாடு மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
 
முறையற்ற வகையில் வெளி மாநிலத்தில் பதிவு செய்து இயங்கும் ஆம்னி பேருந்துகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
வெளி மாநிலத்தில் பதிவெண் கொண்ட பேருந்துகள் தமிழகத்தில் அதிகமாக இயங்குகிறது என்று தமிழக ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் ஏற்கனவே புகார் அளித்திருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஜூன் 14ஆம் தேதிக்கு பிறகு வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் ரத்து.. ஆனால் பணியிட மாற்றம்..!

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments