Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் உறுப்பினர்களாக சேரவே இல்லை.. ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் தோல்வியா?

Mahendran
வியாழன், 31 ஜூலை 2025 (10:17 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க.வால் தொடங்கப்பட்ட ‘ஓரணியில் தமிழ்நாடு" திட்டத்தில் பல போலி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது, இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த ஜூலை 1 ஆம் தேதி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு" திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் குறைந்தது 30 சதவீதம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பது முக்கிய விதியாகக் கொள்ளப்பட்டது. 
 
ஆனால், தற்போது "‘ஓரணியில்  தமிழ்நாடு" திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களிடம் தொலைபேசி மூலம் விசாரித்தபோது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பலர், "நாங்கள் உறுப்பினர்களாக சேரவில்லை, வெறும் நம்பர் மட்டும் கேட்டார்கள், கொடுத்தோம்," என்றும், "தி.மு.க.வில் உறுப்பினராகச் சேரவில்லை" என்றும் பதில் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மொத்தத்தில் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் தோல்வி அடைந்ததாக  பரவலாக பேசப்படுவது" பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் கட்சிக்குள் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், திட்டத்தின் வெற்றி வாய்ப்பு குறித்தும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது..
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயதுக்கு உட்பட்டவர்கள் யூடியூப் பயன்படுத்த தடை.. உலகில் முதல்முறையாக நிறைவேற்றப்படும் மசோதா..!

இந்தியாவுக்கு 25% வரி என டிரம்ப் மிரட்டல் எதிரொலி.. படுவேகமாக சரியும் பங்குச்சந்தை..!

கையெழுத்து சரியில்லை என 3ஆம் வகுப்பு மாணவருக்கு சூடு வைத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments