Webdunia - Bharat's app for daily news and videos

Install App

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு வாங்கப்படும்: சரத்குமார்

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு வாங்கப்படும்: சரத்குமார்

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2016 (02:30 IST)
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் விருப்பமனு பெறப்படும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
 

 
திருவண்ணாமலையில் சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் ஒருவரின் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சரத்குமார் கலந்து கொண்டு அந்தக் கடையை திறந்துவைத்தார்.
 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் சட்ட மன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி முக்கிய இடத்தைப் பெறும். மக்களிடம் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. எனவே, வரும் சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும். அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து நீடிக்கிறது.
 
மேலும், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களிடம் விருப்ப மனு விரைவில் பெறப்படும் என்றார்.
 
 

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

Show comments