Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓபிஎஸ் கையில் 10 அமைச்சர்களின் குடுமி: கலக்கத்தில் சசிகலா அணி!

ஓபிஎஸ் கையில் 10 அமைச்சர்களின் குடுமி: கலக்கத்தில் சசிகலா அணி!

ஓபிஎஸ் கையில் 10 அமைச்சர்களின் குடுமி: கலக்கத்தில் சசிகலா அணி!
, திங்கள், 27 மார்ச் 2017 (10:39 IST)
ஆர்கே நகரில் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிரச்சார யுத்தியாக எடப்பாடி பழனிச்சாமி அரசில் உள்ள 10 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட ஓபிஎஸ் அணியினர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.


 
 
ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டு நிற்பதால் அதிமுகவின் இரண்டு அணிகளுக்கும் ஆர்கே நகர் தேர்தல் முக்கியமான தேர்தலாக அமைந்துள்ளது. ஓபிஎஸ் அணியில் மதுசூதனனும், சசிகலா அணியில் தினகரனும் வேட்பாளராக களத்தில் உள்ளனர்.
 
இதனையடுத்து கடும் போட்டியில் தினகரனை எதிர்த்து ஓபிஎஸ் அணியின் மதுசூதனனை வெற்றிபெற வைக்க பல்வேறு யுக்திகளை ஓபிஎஸ் அணியினர் கையாண்டு வருவதாக கூறப்படுகிறது.
 
இதன் உச்சக்கட்ட பிரச்சாரமாக தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நேரத்தில், எடப்பாடி பழனிச்சாமி அரசின் முக்கிய துறையில் அமைச்சர்களாக இருக்கும் 10 பேரின் ஊழல் விபரங்களை ஓபிஎஸ் அணியினர் வெளியிட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
இதற்காக எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்ற பின்னர் அவரது அரசில் நடந்த பல்வேறு ஊழல்கள், முறைகேடுகளின் பட்டியலை தயாரிப்பதில் ஓபிஎஸ் அணி தற்போது தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கற்பழிக்கப்பட்ட பெண் சத்தம் போடாததால் கற்பழித்தவரை விடுதலை செய்த நீதிமன்றம்!