Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சி தலைவரான ஈபிஎஸ், கடுப்பில் கிளம்பிய ஓபிஎஸ்!!

Webdunia
திங்கள், 10 மே 2021 (13:31 IST)
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வான நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் 65 இடங்களில் வெற்றிபெற்றுள்ள அதிமுக சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் எதிர்கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்பதில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
 
இதனால் முன்னதாக கூட்டப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்வு எட்டாத நிலையில் இன்று மீண்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே சட்டமன்ற எதிர்க்கட்சி தவைராக எடப்பாடி பழனிசாமி தேர்வான நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக எம்.எல்.ஏ கூட்டம் நிறைவடைந்த பின் ஓ.பன்னீர்செல்வம் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் கோபமாக  அவர் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments