''திமுக எதிரி; பழனிசாமி துரோகி''...ஓபிஎஸ் - டிடிவி.தினகரன் இணைந்து செயல்பட முடிவு

Webdunia
திங்கள், 8 மே 2023 (21:07 IST)
ஓபிஎஸ் , அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை இன்று  சந்தித்துப் பேசியுள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் இச்சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்பின் போது இருவரும் இணைந்து கூட்டாக அளித்த பேட்டியில்,  ''கடந்த காலங்களை மறந்துவிட்டு இருவரும் ஒன்றாக இணைந்துள்ளோம்.  சசிகலா தற்போது வெளியூர் சென்றுள்ளதால் விரைவில் அவரைச் சந்திப்பேன். தொண்டர்கள் மனதில் உள்ள அடிப்படையில், இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளோம் என்று  ஓபிஎஸ் கூறினார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியதாவது:

எங்களுக்கு இடையே எந்தப் பகையும் இல்லை. ஆணவத்துடன், அரக்கர்கள் போல் செயல்படுபவர்களிடமிருந்து அதிமுகவை மீட்போம். பன்னீர்செல்வத்தை நம்பி இருட்டில் கூட கைப்பிடித்தபடி செல்ல முடியும். பழனிசாமியை நம்பி செல்ல முடியுமா?

திமுக எதிரி, பழனிசாமி துரோகி  நான் பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருந்தேன் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா கொடுத்த அழுத்தம்.. ஈரானுக்கு உதவ முடியாத நிலையில் இலங்கை..!

AI தொழில்நுட்பத்தை போரில் பயன்படுத்திய அமெரிக்கா.. முதல் 24 மணி நேரத்தில் நடந்தது இதுதான்..!

மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்.. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வீடுகளுக்கு மின்சார கட்டணம் குறைவு.. அதிரடி அறிவிப்பு..!

ஈரான் விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த குண்டு போட்ட இஸ்ரேல்.. ஈரான் பதிலடி கொடுக்குமா?

விஜய் - அண்ணாமலை - சீமான் புதுக்கூட்டணியா? திராவிட கட்சிகளுக்கு சவாலாக இருக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments