Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி அரசுக்கு ஆதரவா? : மாஃபா பாண்டியராஜன் விளக்கம்...!

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (06:19 IST)
தமிழகத்தில் மீண்டும் அசாதாரண அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திகார் சிறையில் இருந்து திரும்பி வந்த தினகரன், புது அணி ஒன்றை உருவாக்கியுள்ளார். அவரது அணிக்கு இதுவரை 27 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும் மேலும் சிலர் ஆதரவளிக்க தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.





இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால் ஓபிஎஸ் அணியில் உள்ள 12 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதை உறுதி செய்யும் வகையில் டுவிட்டரில் ஒருவர் '"ஆட்சிக்கு பங்கம் வந்தால், பாண்டியராஜன் உள்ளிட்ட ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூட இவர்கள் பக்கம் ( ஈ.பி.எஸ்) வாக்களிப்பார்கள்" என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவை ஓபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ரீடுவீட் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, '"பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலை வந்தால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று கூறினார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments