Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் அணியோடு நான் இணையவில்லை - எம்.எல்.ஏ சரவணன் மறுப்பு

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (18:10 IST)
ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி தினகரன் அணியோடு இணைந்து விட்டதாக வெளியான செய்தி வதந்தியே என எம்.எல்.ஏ சரவணன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.


 
 
இன்று தினகரனுக்கு ஜாமீன் கிடைத்த ஒரு மணி நேரத்தில் ஓபிஎஸ் அணியிலிருந்த மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், சசிகலாவின் தினகரன் அணியில் ராஜன் செல்லப்பா முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டதாக தகவல்கள் வெளிவந்தது. உறுதி செய்யப்படாத இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
இந்நிலையில், எம்.எல்.ஏ.சரவணன் தரப்பிலிருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தரப்பிலிருந்து வெளியிட்டுள்ள செய்தியில் “மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மை தொண்டன் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தர்மயுத்ததின் நாகப்பட்டினம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நமது தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு S.S.சரவணன் அவர்கள் பயணம். அண்ணன் திரு O.பன்னீர்செல்வம் அவர்களின் தர்மயுத்ததில் வந்தது வந்தது தான்.கூவாத்தூர் செல்ல வாய்ப்பில்லை. தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments