ஆயிரம் ஸ்டாலின், ஆயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது

Webdunia
புதன், 8 மே 2019 (16:11 IST)
ஆயிரம் ஸ்டாலின், ஆயிரம் தினகரன் வந்தாலும் அ.தி.மு.க., அசைக்க முடியாது என்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பாறையூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளில்  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்தார். அரவக்குறிச்சி அடுத்துள்ள பாறையூர் பகுதியில் அவர் பேசும் பொது, மத்திய மாநில அரசு திட்டங்களை உங்களுக்கு அளிப்பவர் செந்தில்நாதன், வாக்காளர்களான நீங்கள் எடைபோட்டு வாக்களிக்க வேண்டும். ஆறு லட்சம் எளிய எளிய மக்களுக்கு கான்கீரீட் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு உணவு பாதுகாப்பை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாக ஏற்படுத்தினார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க.வை தொட்டுகூட பார்க்க முடியாது. தமிழகத்தில் ஜீவாதார உரிமைகளை பறிபோக காரணமா இருந்தவர்கள் தி.மு.க., கட்சிதான். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது அ.தி.மு.க., அரசுதான் என்றும் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், இந்த இடைதேர்தல் தேவைதான துரோகத்திற்கு பெயர் போன செந்தில் பாலாஜி இங்கு போட்டியிடுகிறார். ஆயிரம் ஸ்டாலின் ஆயிரம் தினகரன் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது. அதனால் வாக்காளர்கள் ஆகிய நீங்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என்று பேசினார்.

சி.ஆனந்தகுமார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments