Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனம் திருந்து வருபவர்களை மன்னிப்பதே அழகு! – ஈபிஎஸ் முன்னிலை ஓபிஎஸ் சூசக பேச்சு!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (12:24 IST)
கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் சூசகமாக ஈபிஎஸ் முன்னிலையில் சொன்ன குட்டிக்கதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இருந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கிற்காக சிறை சென்ற நிலையில் அவர் கட்சியின் பொது செயலாளர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். தற்போது விடுதலையாகி வந்த சசிகலா தான் மீண்டும் அதிமுகவை மீட்பேன் என பேசி வருகிறார்.

இந்நிலையில் சசிக்கலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் அதிமுகவினருக்குள்ளேயே இரு வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிமுகவின் கிறிஸ்துமஸ் விழாவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம் குட்டிக்கதை ஒன்றை சொல்லி “மனம் திருந்தி வருபவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வதுதான் தலைமைக்கு அழகு” என பேசியுள்ளார். ஓபிஎஸ் மறைமுகமாக சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து சூசகமாக பேசியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

மதுரை மாநாட்டை தள்ளி வைத்த ஓபிஎஸ்.. பாதயாத்திரை செல்கிறார் ஓபிஎஸ் மகன்..!

1 ரூபாய்க்கு BSNL சிம் கார்டு: சுதந்திர தின சலுகை அறிவிப்பு

ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 விலை உயர்ந்த தங்கம்.. நகை பிரியர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments