Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிதான் நிஜ ஜல்லிகட்டு நாயகன் – ஓபிஎஸ் புகழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (17:50 IST)
இன்று தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி தாராபுரத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. இந்நிலையில் பாஜக சார்பில் தாராபுரத்தில் போட்டியிடும் எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி இன்று தாராபுரம் வருகை தந்து பிரச்சாரம் செய்தார்.

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.  அப்போது பேசிய ஓபிஎஸ் ‘எல்லோரும் என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. நான் முதல்வராக இருந்த போது மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது நான் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து எடுத்துக் கூறினேன். அவர் உடனடியாக நான்கு துறைகளின் அனுமதியை பெற்று ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு பெற்றுத் தந்தார். உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments