அதிபுத்திசாலி ஈபிஎஸ்.. அறிவாளி ஜெயக்குமாரிடம் கேளுங்கள்: செய்தியாளர்களுக்கு ஓபிஎஸ் பதில்..!

Siva
வியாழன், 1 பிப்ரவரி 2024 (17:08 IST)
நாடாளுமன்றத்தில் சிஏஏ சட்டம் குறித்த வாக்கெடுப்பின்போது ஆதரவாக வாக்களித்த அதிமுக தற்போது சிஏஏ சட்டத்தை எதிர்ப்பதாக கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்த கேள்வியை அதிபுத்திசாலி ஆன எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அறிவாளியான ஜெயக்குமார் இடம் கேளுங்கள் என்று செய்தியாளர்களிடம்  முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

மேலும் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் ஒரு சில நாளில் தான் அறிவிக்க இருப்பதாகவும் தற்போது பாஜக அணியில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரட்டை இலை பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் விரைவில் அந்த வழக்கு முடிவுக்கு வரும் என்றுதான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தனி அணியாக அமைத்து பாஜகவுடன் கூட்டணி சேருவாரா அல்லது பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்வாரா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments