Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரு அணிகளும் இணையாது - ஓ.பி.எஸ் திட்டவட்டம்

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (13:42 IST)
அதிமுக கட்சியில் உள்ள இரு அணிகளும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுகவில் ஓ.பி.எஸ் அணி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணி என இரு அணிகள் செயல்படுகிறது. இரு அணிகளும் இணைவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனாலும், சில கோரிக்கைகளில் ஓ.பி.எஸ் அணி உறுதியாக இருப்பதால், இதுவரை பேச்சுவார்த்தை கூட நடைபெறவில்லை.
 
அந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ் எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவை கலைத்து விடுவதாக அறிவித்தார். 
 
மேலும், சமீபத்தில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அவர் “ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை நாங்கள் ஆதரித்துள்ளோம். ஜெயலலிதா உயிரோடு இருந்தாலும் இந்த முடிவைத்தான் எடுத்திருப்பார். அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு இனி வாய்ப்பே இல்லை” என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
இவரின் அறிவிப்பு முதல்வர் எடப்பாடி அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments