Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேவர் குருபூஜை - ஓ. பன்னீர்செல்வம், மலர் வளையம் வைத்து அஞ்சலி

தேவர் குருபூஜை - ஓ. பன்னீர்செல்வம், மலர் வளையம் வைத்து அஞ்சலி
, வியாழன், 30 அக்டோபர் 2014 (17:16 IST)
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 107ஆவது பிறந்த நாள் மற்றும் குரு பூஜையை முன்னிட்டு, இன்று (30.10.2014) ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

 
அவருடன் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பூ. செந்தூர் பாண்டியன், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத் தலைவர் கு. தங்கமுத்து மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் ஆர். முருகையா பாண்டியன் உள்ளிட்டோர், தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
 
மேலும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் தேவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil