Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு
, வெள்ளி, 31 அக்டோபர் 2014 (11:39 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு மற்றும் நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. 
 
விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு 1.11.2014 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது. 
 
இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் மற்றும் திருநெல்வேலி வட்டங்களிலுள்ள 18,090 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். 
 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil