சொங்கோட்டையன் பதவி பறிப்பு: அவை முன்னவராக ஓபிஎஸ் நியமனம்!

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (11:43 IST)
தமிழக சட்டப்பேரவை வரும் 8-ஆம் தேதின் கூட உள்ள நிலையில் அவை முன்னவர் பொறுப்பு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவை முன்னவராக அப்போது ஓ.பன்னீர்செல்வம் இருந்துவந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் பிளவு வந்தபோது ஓபிஎஸ் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.
 
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது ஓபிஎஸ் வகித்து வந்த அவை முன்னவர் பதவி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அதிமுக அணிகள் இணைந்து ஓபிஎஸுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
 
இந்நிலையில் வரும் 8-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட உள்ள நிலையில், இரு அணிகளும் இணைந்துவிட்டதால், அவை முன்னவர் பொறுப்பு அமைச்சர் செங்கோட்டையனிடம் இருந்து பறிக்கப்பட்டு மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments