Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும்! – எதிர்க்கட்சிகள் கருப்புக்கொடி போராட்டம்!

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (08:26 IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக எதிர்க்கட்சிகள் நாளை போராட்டம் நடத்தவுள்ளன.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பொதுத்தேர்வை நடத்தக்கூடாது என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆர்பாட்டம் நடத்துவதற்கான கூட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி ஐந்து பேருக்கு மிகாமல் அவரவர் இல்லத்தின் முன்பு கூடி கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த போராட்டத்தில் மதிமுக தோழர்களும் கலந்து கொள்ளுமாறு வைகோ தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை திமுக, திக, தமிழ்நாடு காங்கிரஸ், அகில இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments