கனமழையால் ஊட்டி மலை ரயில் ரத்து.. மீண்டும் எப்போது தொடங்கும்?

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2023 (08:05 IST)
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாகவும் மேலடுக்கு காற்றின் சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லார், அடர்லி ஆகிய ரயில் நிலையங்கள் அருகே கனமழை காரணமாக  தண்டவாளத்தின் மீது பாறைகள் சரிந்து உள்ளது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மழை நிலவரத்தை பொறுத்து நவம்பர் 7ஆம் தேதி காலை  மீண்டும் ஊட்டி ரயில் சேவை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments