Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ-பாஸ் இல்லை என ஜாலியா சென்னைக்கு வருவோரின் கவனத்திற்கு... !

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (18:23 IST)
தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் இனி தனிமைப்படுத்துதல் முறை கிடையாது என அறிவிப்பு. 
 
கொரோனா பரவல் காரணமாக பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.  ஆனால் இப்போது இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதால் மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை என கூறப்பட்டுள்ளது.  
 
முன்னதாக கொரோனா பரவல் காரணமாக பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் தற்போது, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லுபவர்களுக்கு கட்டாய பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் இனி தனிமைப்படுத்துதல் முறை கிடையாது. வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்படும் என கூறினார். 
 
அதோடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், தொற்று குறைந்து விட்டது என்று நினைக்காமல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை எச்சரிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும். தேவையற்ற பயணம், வெளியே சுற்றுவதை 3 மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments