5 நாளைக்கு ஆன்லைன் க்ளாஸ் லீவ்! – மாணவர்கள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (10:43 IST)
தமிழகத்தில் மாணவர்களுக்கு நடைபெற்று வரும் ஆன்லைன் வகுப்புகளுக்கு 5 நாட்கள் விடுப்பு அளிக்க அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் படிப்பதால் உடல்நல குறைபாடுகள் ஏற்படுவதாகவும், பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக செப்டம்பர் 12 முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாமல் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்யவும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments