Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10,11,12க்கு ஆன்லைன் வகுப்பு நடந்த ஆலோசனை!!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (14:01 IST)
பொங்கல் விடுமுறைக்கு பின் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வி துறை ஆலோசனை நடத்தி வருகிறது. 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நடந்து வந்த நிலையில் 19 தேதி திருப்புதல் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், கொரோனா மூன்றாவது அலை அதிகரிப்பதால் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.
 
இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு, 10 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவே நேரடி வகுப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. அதோடு பொங்கல் விடுமுறைக்கு பின் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வி துறை ஆலோசனை நடத்தி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments