Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக கடல் பகுதியில் எரிவாயு எடுக்க ONGCக்கு அனுமதி! - அதிர்ச்சியில் மீனவர்கள். இயற்கை ஆர்வலர்கள்!

Prasanth Karthick
ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (13:57 IST)

தமிழ்நாட்டின் வங்கக்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி இந்தியா முழுவதும் பல பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலமாக எண்ணெய், எரிவாயு போன்றவற்றை எடுத்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவை சுற்றியுள்ள கடல்பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான திட்டங்களை ஓஎன்ஜிசி மேற்கொண்டு வந்தது.

 

இந்நிலையில் இந்திய கடல்பகுதிகளில் 25 பகுதிகளில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 3 பகுதிகள் கன்னியாக்குமரி கடல் பகுதியில் இந்திய பெருங்கடலை ஒட்டியும், ஒரு பகுதி சென்னை அருகே கடல்பகுதியிலும் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இதனால் கடல் மாசுபாடு ஏற்படலாம் என்றும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்றும் மீனவர்களிடையே அச்சம் உள்ளது. இந்த திட்டத்திற்கு மீனவர்களிடையே கடும் எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments