பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு விநியோகம் எப்போது? கூடுதல் தலைமை செயலாளர்

Siva
திங்கள், 23 டிசம்பர் 2024 (09:38 IST)
பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பே பரிசு தொகுப்புகள் விநியோகம் செய்யப்படும் என கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகைக்கு வேட்டி சேலைகள் இலவசம் மற்றும் ரொக்க பணம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பொங்கல் பரிசு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பார் என்றும், பொங்கல் பரிசு தொகைக்கு வழங்குவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே பரிசு தொகுப்புகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments