சென்னையில் மேலும் ஒரு காவலர் தற்கொலை

Webdunia
திங்கள், 14 மே 2018 (10:12 IST)
சென்னையில் மன அழுத்தம், வேலைப்பளு, குடும்ப சூழ்நிலை, மேலதிகாரிகளின் டார்ச்சர் உள்பட பல்வேறு காரணங்களால் காவலர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது 
 
சமீபத்தில் ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அருண்ராஜ் என்ற 27 வயது சென்னை ஆயுதப்படை காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் சென்னை கொருக்குப்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜோசப் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
 
பெருகி வரும் காவலர்களின் தற்கொலைக்கு அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் காரணம் என்பதால் காவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க காவல்துறை மேலதிகாரிகள் முடிவு செய்தனர்.
 
இந்த நிலையில் பணிச்சுமை காரணமாக சென்னை ஈஞ்சம்பாக்கம் காவல்நிலைய காவலர் பாலமுருகன் என்பவர் இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments