Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மேலும் ஒரு காவலர் தற்கொலை

Webdunia
திங்கள், 14 மே 2018 (10:12 IST)
சென்னையில் மன அழுத்தம், வேலைப்பளு, குடும்ப சூழ்நிலை, மேலதிகாரிகளின் டார்ச்சர் உள்பட பல்வேறு காரணங்களால் காவலர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது 
 
சமீபத்தில் ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அருண்ராஜ் என்ற 27 வயது சென்னை ஆயுதப்படை காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் சென்னை கொருக்குப்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜோசப் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
 
பெருகி வரும் காவலர்களின் தற்கொலைக்கு அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் காரணம் என்பதால் காவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க காவல்துறை மேலதிகாரிகள் முடிவு செய்தனர்.
 
இந்த நிலையில் பணிச்சுமை காரணமாக சென்னை ஈஞ்சம்பாக்கம் காவல்நிலைய காவலர் பாலமுருகன் என்பவர் இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments