Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலிண்டர் வெடித்து விபத்து: மேலும் ஒருவர் பலி

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (13:35 IST)
சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
 
சேலம் கருங்கல்பட்டியில் தீயணைப்பு துறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவரது வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்துள்ளது. இதனால் சுற்றியிருந்த வீடுகளும் சேர்த்து 4 வீடுகள் இடிந்து தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
 
ஆம், தீயணைப்பு துறை வீரர் பத்மநாபன் என்பவர் வீடு தரைமட்டமானதில் இடிபாடுகளில் சிக்கிய அவர் உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஏற்கனவே மூதாட்டி ராஜலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிறுமி உட்பட 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments