நடிகர் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறைதண்டனை.. நீதிபதி அதிரடி தீர்ப்பு..!

Mahendran
திங்கள், 19 பிப்ரவரி 2024 (14:24 IST)
சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளதால் நடிகர் எஸ்வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக  நீதிபதி தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் ஒருவர் குறித்து தரக்குறைவாக பேஸ்புக்கில் எஸ்வி சேகர் பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. எஸ்வி சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
 
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் எஸ் வி சேகர் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி ஜெயவேல், அவருக்கு ரூபாய் 15,000 அபராதம் மற்றும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த தண்டனையை எதிர்த்து நடிகர் எஸ்வி சேகர் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

மதுரை, கோவைக்கு மெட்ரோ கிடையாது.. திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு..!

டிவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் ஏன் திமுகவுடன் கூட்டணி? கமல் சொன்ன விளக்கம் யாருக்காவது புரிந்ததா?

இன்று முதல் நவம்பர் 22 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments