Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருவூர் நகரத்தார் சங்கம் சார்பில் ''பிள்ளையார் நோன்பு"

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (15:48 IST)
உலகெங்கும் வாழும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் நோன்பான பிள்ளையார் நோன்பு விழா 13.12.2018 மாலை கருவூர் அழகம்மை மஹாலில் கொண்டாடப்பட்டது.
சங்கத் தலைவர் சுப.செந்தில்நாதன் தலைமை தாங்கினார் செயலாளர் மேலை பழநியப்பன் நோன்பின் மாண்பினை விளக்கினார். ஷோபிகா பழனியப்பன் மற்றும் குழந்தைகள் விநாயகர் அகவல் பாடினர். அகல்யா மெய்யப்பன் கரு.ரெத்தினம் ராமசாமி முத்தையா வழிபாட்டை நெறிப்படுத்தினர்.

சமூகப் பெரியவர்கள் வைரவன் கண.ராமையா இளை எடுத்துக் கொடுக்க குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் 400 பேர் எரியும் சுடரொடு இளை விளக்கினை விழுங்கி நோன்பு களைந்தனர் தொடர்ந்து வழிபாட்டில் வைத்து வழிபட்ட உப்பு ஒரு கிலோ 27000 ரூபாய்க்கும் வீடு, காமாட்சி விளக்கு, சட்டை சர்க்கரை, கல்கண்டு, ஸ்கூல் பேக் வாழைப்பழம், தேங்காய் என இருபத்து ஒரு மங்களப் பொருட்களை மேலை -பழநியப்பன் ஏலம் கோரி ஒரு லட்சத்து ஐம்பத்து ஏழாயிரம் ரூபாய் ஏலம் நடைபெற்றது சோமு அமர் ஜோதி ஆறுமுகம் மோகன்ராமையா பாலாறு குழுவாகச் செயல்பட்டனர்.

இத்தொகை கல்வி, திருமண உதவித் திட்டமாக சமுதாய மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய போராட்டக்காரர்கள்.. லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை..!

டெல்லி சிறப்பாக செயல்படுகிறது.. இனி டெல்லியை நாங்கள் பின்பற்றுவோம்: துணை முதல்வர் டிகே சிவகுமார்

சட்டவிரோதமாக நுழைந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! - இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!

மனுஷங்க ஒட்டு கேக்குறாங்க..! திடீரென ரகசிய பாஷையில் பேசிக் கொண்ட AI Models! - அதிர்ச்சியில் டெவலப்பர்ஸ்!

அடுத்த கட்டுரையில்