Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் ரத்து: பாதுகாப்பு இல்லை என்பதால் முடிவு

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (10:20 IST)
தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டாம் என்றும், மழை, வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கினால் பாதுகாப்பு இல்லை என்பதால் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துகுடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு தினசரி 300 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 இதன் காரணமாக சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை உள்பட பல நகரங்களுக்கு செல்லும் மக்களும் திண்டாடி வருகின்றனர். 
 
ஏற்கனவே தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments