Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்தரத்தில் தொங்கிய ஆம்னி பேருந்து - அலறிய பயணிகள்

அந்தரத்தில் தொங்கிய ஆம்னி பேருந்து - அலறிய பயணிகள்
, வியாழன், 21 மே 2015 (15:43 IST)
சென்னையில் இன்று அதிகாலை, ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த பணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
 

 
திருச்சியில் இருந்து, தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு பயணிகளுடன், சென்னை நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி இன்று அதிகாலை வந்தது.
 
அப்போது, ஈக்காட்டுத்தாங்கல் மேம்பாலம் மீது ஏறி சென்று கொண்டிருந்தது. திடீரென ஆம்னி பேருந்து நிலை தடுமாறி இடதுபக்கம் இருந்த தடுப்புச் சுவரை இடித்து பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.
 
இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நடைபெற்றதால், அதில் பயணம் செய்த பயணிகள் பலர் தூக்கக் கலக்கத்தில் இருந்தனர். பலர் பேருந்து உள்ளேயே  தூக்கிவீசப்பட்டனர். இதனால், அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காப்பாற்றினர்.  ஆனால், யாரும் நல்வாய்ப்பாக பலியாகவில்லை. ஆனால், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
 
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தினுள் சிக்கிய பயணிகளை மீட்டு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
 
இந்த விபத்து காரணமாக ஈக்காட்டுத்தாங்கல் சாலையில் அதிகாலை முதல் பல மணி நேரம் வரை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil