70 வயதான சிவபாஸ்கரன் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்.
இவர், பசியுடன் இருப்பவர்களுக்கு உணவளியுங்கள் என்ற கோரிக்கையுடன் தமிழகம் முழுவதும் சைக்கிளில் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
தூத்துக்குடியில் பிரசாரப் பயணம் தொடங்கிய அவர், நேற்று ஈரோட்டுக்கு வந்தடைந்தார். அவர் வழி நெடுகிலும் துண்டறிக்கைகள் மூலம் பிரசாரம் செய்து வருகிறார். 70 வயதிலும் அவர் துடிப்புடன் மக்கள் நலனுக்கா பிரசாரம் செய்வதை பொதுமக்கள் வியப்புடன் பார்கின்றனர்.