Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்
, திங்கள், 2 நவம்பர் 2015 (14:26 IST)
ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
திருவண்ணாமலை அருகே கோட்டம்பாளையத்தில் வசிப்பவர் அய்யப்பன்(50). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவர் அவரின் நண்பரின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற போது, அங்கு உறவினராக வந்திருந்த 5 வயது சிறுமி தனியாக இருப்பதை பார்த்துள்ளார்.  
 
அந்த சிறுமியிடம் தவறாக நடந்து விட்டு அவர் அங்கிருந்து சென்று விட்டார். இதுபற்றி அந்த சிறுமி தனது பாட்டியிடம் கூறியிருக்கிறாள். அதிர்ச்சி அடைந்த அவரும், அவரது உறவினர்களும் அய்யப்பனை தேடியுள்ளனர்.
 
நேற்று காலை அந்த பகுதிக்கு அய்யப்பன் வந்ததை தெரிந்த கொண்ட அவர்கள் அவரை பிடித்து, அருகிலிருந்த மின்சார கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர். 
 
தகவல் அறிந்த காவல்துறை அந்த இடத்திற்கு சென்று அவரை மீட்டு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil