Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெடுவாசலில் ஒப்பாரி போராட்டத்த்தின் போது, ஒப்பாரிக்கு ஆளான பாட்டி!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2017 (10:57 IST)
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரானா ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.


 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து 22 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 21ஆவது நாள் போராட்டம் நடைபெற்றது.

அப்போது பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது பொன்னம்மாள் என்ற மூதாட்டி மயக்கம் அடைந்தார். மயக்கம் அடைந்த பொன்னம்மாள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம், நெடுவாசல் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பாரி போராட்டத்த்திற்கு சென்ற பாட்டி கடைசியாக ஒப்பாரிக்கு ஆளாகி விட்டாளே என்று அப்பகுதி மக்கள் பேசிக் கொண்டனர்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments